Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #fasle

நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கே கிடைக்கும் என டில்வின் தெரிவித்ததாக போலிச்செய்தி

False
False

Newsfirst இன் சின்னத்துடன் பகிரப்படும் இந்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை

by Anonymous |

செப்டம்பர் 4, 2024

ஜனாதிபதியாக யாரை நியமித்தாலும் நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கே கிடைக்கும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்ததாக பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தப் பதிவு குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்ததில், ​​இந்தப் பதிவானது கடந்த 02.09.2024 அன்று Sirasa newsfirst மூலம் வெளியிடப்பட்ட ஒரு பதிவாக பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது,

எனினும், 2024.09.02 அன்றோ அல்லது அந்த வாரத்தில் எந்தவொரு தினத்திலோ newsfirst.lk ஊடக வலையமைப்பிற்குச் சொந்தமான எந்தவொரு சமூக வலைதளக் கணக்கிலும் அல்லது இணைய பக்கத்திலும் இந்தப் பதிவு வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவிடம் factseeker வினவியபோது, இது போலியான சமூக வலைதளப் பதிவு எனவும், இவ்வாறான கருத்துக்களை தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, newsfirst இன் சின்னத்துடன், ஜனாதிபதியாக யாரை நியமித்தாலும் நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச்செயலாளருக்கே கிடைக்கும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்ததாக பகிரப்படும் பதிவானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

 

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection