Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

False
False

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளார்

by Anonymous |

பிப்ரவரி 1, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நடிகர் ரஜித ஹிரான் சாமிகர நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானதை அடுத்து வெற்றிடமாக இருந்த இந்த பதவிக்கு ரஜித ஹிரான் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பதிவுகள் தெரிவிக்கின்றன. ரஜித ஹிரான் ஒரு நிகழ்வில் பல பெண்களை அன்புடன் வரவேற்பது போன்றும், மற்றுமொரு காட்சியில் அவர் அமர்ந்து குறிப்பு எடுப்பது போன்றும் உள்ள வீடியோக்களுடன் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன.

இந்தத் தகவல்களுக்கு சமூக வலைதளப் பயனர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிலர் இதனை உண்மை என நம்பியிருந்தாலும், ஏனையோர் இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தத் தகவலைச் சரிபார்க்க FactSeeker ஆராய்ந்தது. .

அதற்கமைய நடைபெற்ற நிகழ்வை ஆராய்ந்து பார்த்ததில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும் அஜித் நாரகல அவர்களின் உத்தியோகபூர்வ facebook பக்கத்திலும் அவர் பதவிப்பிரமாணம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

link :- https://www.facebook.com/share/1ZfDuPjAnC/?mibextid=wwXIfr

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நடிகர் ரஜித ஹிரான் சாமிகர நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்ற பதிவொன்றையும் அவர் தனது facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளதை ஹிரு தொலைக்காட்சி செய்தியிலும் ஒளிபரப்பியுள்ளனர்.

link : https://www.facebook.com/share/v/1DZStRtiQD/?mibextid=wwXIfr

உண்மை நிலவரம்:
பரப்பப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தபோது, அதே நிகழ்வில் நடிகை அனுஷா தமயந்தி மற்றும் நடிகர் அர்ஜுன் கமலநாத் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைக் காண முடிந்தது. கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நாரகல அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே தாம் அங்கு வந்ததாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நடிகர் ரஜித ஹிரான் சாமிகரவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

Link :- https://www.facebook.com/reel/912118631509188/?fs=e&mibextid=wwXIfr

அத்துடன், பரவலாகப் பகிரப்படும் குறித்த புகைப்படத்தில் ரஜித ஹிரான் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பு எழுதுவதைக் காண முடிகிறது. இதுவே அவர் நியமிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவக் காரணமாகியுள்ளது.

மேலதிக விபரங்களை உறுதிப்படுத்துவதற்காக FactSeeker, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்னவைத் தொடர்பு கொண்டது. இதன்போது அஜித் நாரகலவே கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், பகிரப்படும் வீடியோக்கள் பிலியந்தலை நகரில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வில் ரஜித ஹிரான் சாமிகர உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டதாக சஞ்சீவ எதிரிமான்ன விளக்கமளித்தார்.

முடிவு:
நடிகர் ரஜித ஹிரான் சாமிகர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection