Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

தேசிய மக்கள் சக்தியில் ‘மொஹமட் இப்ராஹிம்’ போட்டியிடுவதாக போலிச்செய்தி

False
False

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்ததில் அப்பட்டியலில் மொஹமட் இப்ராஹிமின் பெயர் இல்லை

by Anonymous |

அக்டோபர் 10, 2024

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் இருவரின் தந்தையான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப்பதிவுகளுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இதன் உண்மைத்தன்மையை அறிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்ததில் அப்பட்டியலில் மொஹமட் இப்ராஹிமின் பெயர் இல்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும், வேறு மாவட்டத்திலோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளரிலோ இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவற்றிலும் இவரது பெயர் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது இவரது பெயரை தேசிய பட்டியலில் உள்ளடக்கியதாகவும், இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி எந்த மாவட்டத்திலும் இவர் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஆகவே,மொஹமட் இப்ராஹிம், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection