Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #explainer

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாதா ?

Partially factual
Partially factual

உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

by Anonymous |

நவம்பர் 26, 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என்றும், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவராது என்று பதிவுகள் சில whatsapp போன்ற சமூக தளங்களில் பகிரப்படுவதை FasctSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்த போது,

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த நவம்பர் 18 ஆம் திகதி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதை இடைநிறுத்துமாறு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பில் பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/199078
https://www.adaderana.lk/news.php?nid=103581

இந்நிலையிலேயே ‘தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என்றும், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவராது’ என்று பகிரப்படும் இவ்வாறான பதிவுகள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியி்லும் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து மேலதிகமாக ஆராய்ந்து பார்த்தது,

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தரவிடம் FactSeeker வினவிய போது, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு காரணமாக விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பான தீர்மானம் அமைச்சு மட்டத்தில் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விஷாகா அபேரத்னவிடம் வினவிய போது, ​​நீதிமன்ற உத்தரவு காரணமாக பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட மாட்டாது என தெரிவித்தார். கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் அடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றதை போன்று தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி இடம்பெறாது என்பதற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் அரசங்கத்தினால் எடுக்கப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்திக்கிறது.

Latest updates

#false

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

#Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

#Misleading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

Related Content

கஜகஸ்தான் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தார்களா?

டிசம்பர் 27, 2024

சீன நன்கொடையால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள்: முன்னாள் கல்வி அமைச்சரின் பங்களிப்பா?

டிசம்பர் 20, 2024

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததா?

டிசம்பர் 12, 2024

எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள் வருமாயின் அது எவ்வாறு ?

நவம்பர் 5, 2024

அரசாங்கம் 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததாக வெளிவரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன ?

நவம்பர் 4, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection