Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

தமது அரசாங்கத்தின் கீழ் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என அநுர கூறினாரா?

False
False

அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமுடைய கடிதம் ஒன்று Newsfirst செய்தி அலைவரிசையில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது.

by Anonymous |

ஆகஸ்ட் 27, 2024

“எந்த மதத்திற்கும் முன்னுரிமை இல்லை. மதம் அரசிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அநுரவிடமிருந்து ஒரு கடிதம்” என்ற புகைப்படத்துடனான செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

தேசிய மக்கள் சக்தியின் கடித தலைப்பு மற்றும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமுடைய கடிதம் ஒன்று Newsfirst செய்தி அலைவரிசையில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டு வந்தது.

அக்கடிதத்தில், “சங்க மாநாடு நடத்தியதற்காக நாங்கள் இனவாதிகளோ, மதவாதிகளோ அல்ல. ஒரு கருணையுள்ள அரசாங்கத்தில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை இல்லை. எங்கள் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் பின்தங்கிய நாடாக மாறியதற்கு மதமே முக்கிய காரணம் என கருதுகிறோம். நாட்டையும் மதத்தையும் பிரித்து வைத்திருப்பதே எங்களின் முக்கியக் கொள்கையாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்தி Newsfirst இணையத்தளத்திலோ அல்லது சமூக வலைதள பக்கங்களிலோ வெளியிடப்பட்டுள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறான கடிதமொன்றை ஊடக பிரதானிகளுக்கு அனுப்பியுள்ளாரா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் factseeker வினவியபோது, ​​அவ்வாறானதொரு கடிதம் அநுரகுமார திஸாநாயக்கவினால் அனுப்பப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் இது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டு பரிமாறப்பட்ட கடிதம் என தெரிவித்தனர்.

இதேவேளை, தேசிய பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு கடந்த 24ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவித்த போது, “அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சரத்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என தெரிவித்தார்.

ஆகவே, தனது அரசாங்கத்தின் கீழ் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தாதாக பரப்பப்படும் செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

மே 19, 2025

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection