Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

இரத்தினபுரி கல்வி வலயத்தில் "ஒகபத்தன கல்லூரி" என்ற பெயரில் எந்தப் பாடசாலையும் இல்லை என இரத்தினபுரி வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்தது.

by Anonymous |

ஏப்ரல் 2, 2025

இலங்கையைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை உருவாக்கியதாக “லங்காதீப” செய்தித்தாளில் கடந்த மார்ச் 29 ஆம் திகதி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இக் கார் இரத்தினபுரியில் உள்ள “ஒகபத்தன” கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரால் தயாரிக்கப்பட்டது என்றும், அது இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச் செய்தியில் பாடசாலையின் பெயர் “ஒகபத்தன” என குறிப்பிடப்பட்டிருப்பதால் இது குறித்து சமூகவலைதளங்களில் பல கேலி பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதன் உண்மைத்தன்மை குறித்து FactSeeker ஆராய்ந்ததில், இக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர் குறித்து எந்தவொரு தகவல்களும் குறிப்பிடப்படவில்லை மேலும் இரத்தினபுரி பகுதியில் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

இரத்தினபுரி கல்வி வலயத்தில் “ஒகபத்தன கல்லூரி” என்ற பாடசாலை உள்ளதா என இரத்தினபுரி வலயக் கல்வி அலுவலகத்திடம் FactSeeker வினவிய போது, ஒகபத்தன என்ற பெயரில் எந்த பாடசாலையும் இல்லை என தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பில் லங்காதீப நிருவாகத்திடம் வினவிய போது, இச் செய்தி தவாறான செய்தி என்றும் இது தொடர்பான திருத்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி லங்காதீப செய்தித்தாளில் வெளியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆகவே, இரத்தினபுரி பகுதியில் “ஒகபத்தன” என்ற பெயரில் எந்த பாடசாலையும் இல்லை என்பதையும் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தண்ணீரில் ஓடக்கூடிய காரை உருவாக்கியதாக “லங்காதீப” செய்தித்தாளில் வெளியாகிய செய்தி தவறான செய்தி என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

மே 14, 2025

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

மார்ச் 20, 2025

புகையிரதத்தில் ‘ மசாஜ் சேவை’ குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணி

மார்ச் 5, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection