Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

ஜெனரல் சவேந்திர சில்வாவின் விசேட ஜெட் பயண குற்றச்சாட்டுகள் குறித்த விளக்கம்

Misleading
Misleading

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாருடன் ஜெட் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் அடங்கிய ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

டிசம்பர் 15, 2022

அவர் தனியார் ஜெட் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் எனவும், இது போன்ற செலவுகளுக்கு வரவுசெலவு ஒதுக்கீட்டு நிதியைப் பயன்படுத்துவது பற்றிய கவலையை எழுப்புகிறது என்பதையும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டுள்ளதையும் factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

இந்தியாவின் புது டெல்லியில், டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பில் இந்திய இராணுவ கல்வியற்கல்லூரியின் தளபதி லெப்டினன் ஜெனரல் விஜயகுமார் மிஸ்ரா ஏவீஎஸ்எம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டிருந்த நிகழ்வு குறித்தே சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் இந்த விஜயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத்திடம் factseeker வினவியபோது, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பயணித்தது எயார் இந்தியா விமானத்தில் என்பதுடன், டெல்லியில் இருந்து டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரிக்கு பயணித்ததும் இந்திய விமானப்படையின் விசேட ஜெட் விமானத்தில் என்பதை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் factseekerஇடம் உறுதிப்படுத்தினார்.

இந்த பயணத்திற்காக இலங்கை அரசாங்கம் எந்தவொரு செலவையும் செய்யவில்லை எனவும், முற்றுமுழுதாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இந்திய பாதுகாப்புப்படையின் செலவிலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.

மேலும், ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் என்பதை இந்திய இராணுவ அகடமியின் அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜெனரல் சவேந்திர சில்வா டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான காணொளி பதிவையும் இங்கே பார்க்கலாம்.

ஆகவே, இலங்கை மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா விமான பயணத்தை மேற்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்தி உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா சிறப்பு ஜெட் விமானத்தில் பயணம் செய்ததை சமூக ஊடக பதிவுகள் சரியாக அடையாளம் காட்டினாலும், இந்த பயணத்திற்காக பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறுவது தவறானது. ஜெனரல் சில்வாவிற்கு, இந்திய இராணுவ அகடமியின் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக, இந்திய விமானப்படையால் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதே உண்மையாகும்.

Latest updates

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

#AI #fakenews

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

Related Content

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection