Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

ஜனாதிபதி அநுர தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டதாக போலிச்செய்தி

False
False

ஸ்ரீ தலதா மாளிகையின் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் விசேட நினைவுக் குறிப்பொன்றை எழுதுவதும் ஒரு பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

by Anonymous |

செப்டம்பர் 24, 2024

“புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்” என்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட செய்திகள் வெளியானதையடுத்து இவ்வாறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியிட்டிருந்த செய்திகளை அவதானிக்க முடிந்ததுடன் அச்செய்திகளை ஆராய்ந்ததில் சமூக வலைதள பதிவுகளில் கூறுவது போன்ற நிகழ்வுகள் ஏதும் இடம்பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

TV Derana : https://youtu.be/rcwM3AscvRE?t=53

Hiru TV : https://youtu.be/Ofe5JJsGZUE?t=16

இலங்கையில் அரச தலைவர்கள் பதவியேற்றவுடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு செய்வதும் வழிபட்டதன் பின்னர் ஸ்ரீ தலதா மாளிகையின் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் விசேட நினைவுக் குறிப்பொன்றை எழுதுவதும் ஒரு பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பதவியேற்ற பின்னர் தலதா மாளிகையில் நினைவுக் குறிப்புகளை எழுதிச் சென்ற செய்திகளையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/nt597VQJfuNhAxwo/

https://sinhala.news.lk/news/photo-story/item/35817-2019-11-20-10-01-19

ஆகவே, “புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலதா பெரஹெராவை நிறுத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை facrseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection