Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

False
False

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது இராஜதந்திர விஜயம் என்றும், அங்குள்ள இலங்கையர்களுடனான சந்திப்பும் உத்தியோகபூர்வ சந்திப்பு என்றும் factseeker உறுதிப்படுத்துகிறது.

by Anonymous |

ஆகஸ்ட் 27, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, இது தனிப்பட்ட விஜயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் FactSeeker அவதானம் செலுத்தியது.

கடந்த 23 ஆம் திகதி நியூஸ் சென்டர் யூடியூப் அலைவரிசையில் ஊடகவியலாளர் மஞ்சுள பஸ்நாயக்கவுடனான நேர்காணலில் ஹிருணிகா பிரேமச்சந்திர இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

காணொளி இங்கே – https://x.com/SPriyawickrama/status/1959940313742729480

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியதில்,

வெளியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ வலைதளத்தையும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ வலைதளத்தையும் அவதானித்த போது, இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிவிப்புகளை அவதானிக்க முடிந்தது.

கடந்த 2025.06.11 முதல் 2025.06.13 வரை ஜனாதிபதி இந்த விஜயத்தில் பங்குபற்றியிருந்தார். இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பேர்லினில் உள்ள பெல்லூவ் மாளிகையில் ஜெர்மன் ஆயுதப்படைகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றன. அந்த வகையில் ஜனாதிபதி மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதால், இது ஒரு அதிகாரப்பூர்வ விஜயம் என்பது தெளிவாகிறது. மேலும், விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகள் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தன.

ஆகவே, ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்ததைப்போல்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது ஒரு தனிப்பட்ட விஜயம் அல்ல என்பது தெளிவாகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயம் உத்தியோகபூர்வ விஜயமாக இருந்தாலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது தனது கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்தித்திருந்தார் என ஹிருணிகா பிரேமச்சந்திரவின் இன்னொரு காணொளி பகிரப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் factseeker கவனம் செலுத்தியது.

காணொளி இங்கே – https://x.com/NewsCenterLk/status/1959983970826994052

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தனது கட்சி உறுப்பினர்களை சந்தித்திருந்தாரா என ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் வினவியபோது, இந்த விஜயத்தின் கடைசி நாளில் (ஜூன் 13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் ஒரு சந்திப்பு இருந்ததாகவும், ஜெர்மனியில் வசிக்கும் தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படங்களும் வெளியிடப்படிருந்தன

https://www.facebook.com/share/p/1EnkfUMpLW/

அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது இராஜதந்திர விஜயம் என்றும், அங்குள்ள இலங்கையர்களுடனான சந்திப்பும் உத்தியோகபூர்வ சந்திப்பு என்றும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

#Misleading

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

Related Content

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection