Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக திலித் ஜயவீர கூறியதாக போலிக்கடிதம்

False
False

தம்மிக்க பெரேரா தான் விலகிக்கொள்வதாக விடுத்த கடிதத்தை திருத்தியமைத்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

by Anonymous |

ஆகஸ்ட் 10, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும், ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலிலிருந்து விலகப் போவதாகவும் திலித் ஜயவீர அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக, பிரபல தொழில் அதிபரும் தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவில் இருந்து தாம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அதனை  சர்வசன அதிகார கூட்டணிக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடும்  கடிதமொன்று இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க factseeker, தாயக மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்காரவிடம் வினவியபோது, அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் கடிதம் போலியானது என்பதையும் தெரிவித்தார்.

அதேபோல், நேற்றைய தினம் (09.08.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த திலித் ஜயவீர, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாகவும், நல்ல நேரம் பார்த்து தாம் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Link:https://www.facebook.com/NewsfirstSL/videos/904734911698876/

இந்தக் கடிதம் குறித்து மேலும் ஆராய்ந்து பார்த்ததில், இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த தம்மிக்க பெரேரா தான் விலகிக்கொள்வதாக விடுத்த கடிதத்தை திருத்தியமைத்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலில் இருந்து தாம் விலகிக்கொள்ளப்போவதாக திலித் ஜயவீர சர்வசன அதிகார கூட்டணிக்கு தெரிவித்துள்ளதாக பகிரப்படும் கடிதமானது போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

ஜூன் 20, 2025

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection