Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார பெற்றுக்கொண்ட வாக்கு சதவீதம் எத்தனை?

False
False

இரண்டாவது விருப்பு வாக்குகளின் முடிவில் எந்த சதவீத மதிப்பும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படவில்லை

by Anonymous |

செப்டம்பர் 23, 2024

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் குறித்து செப்டெம்பர் 23 (இன்று) மௌபிம பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருப்பதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அச்செய்தியில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை (5,740,179 )  55.89% என்றும், சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் சதவீதம் 44.11% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் சிலவற்றிலும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை அநுரகுமார திசாநாயக பெற்றுக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் இச் சதவீதங்கள் குறிப்பிட்டிருந்ததால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

மௌபிம பத்திரிகையில் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் “முதல் சுற்றில் 5,634,915 வாக்குகளைப் பெற்று 42.31 வாக்கு சதவீதத்தைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாவது சுற்றில் மேலும் 105,264 வாக்குகளைப் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை 5,740,179 (55%) ஆக உயர்த்தி இந்த வெற்றியை பெற்றார்.” என்றும் “முதல் சுற்றில் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76% வீதத்தைப் பெற்றிருந்தார்.இரண்டாம் சுற்றுக்குப் பின்னர் சஜித் பிரேமதாச 4,530,902 வாக்குகளை பெற்றதோடு அவர் பெற்ற வாக்குகளின் சதவீத மதிப்பு 44.11 %.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தேர்தல் முடிவு அட்டவணையை ஆராய்ந்ததில், இரண்டாவது விருப்பு வாக்கு முடிவில் எந்த சதவீத மதிப்பும் வழங்கப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தேர்தல் முடிவு அட்டவணையில், இரண்டாம் வாக்கு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அநுரகுமார திசாநாயக பெற்றுக்கொண்ட வாக்குகள் 105,264 எனவும், சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையுடன் அவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் அவதானிக்கும் போது அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 43.1% ஆகவும், சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதன் 34%. ஆகவும் அதிகரிக்கின்றன.

மேலும், இரண்டாவது விருப்பு வாக்கு குறித்து, manthri.lk இணையதளம் வெளியிட்ட தகவலில் சஜித் பிரேமதாசவிற்கு 1.26% வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு 0.79% வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://manthri.lk/en/presidential-election-result-2024

ஆகவே, மௌபிம பத்திரிகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் குறித்து வெளியிட்ட செய்தி தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

மேலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

மே 14, 2025

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஏப்ரல் 2, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

மார்ச் 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection