Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

False
False

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஜாக்கி சான் மதிப்புமிக்க பர்டோ அல்லா கேரியெரா (தொழில் சாதனை) விருதைப் பெற உள்ளார்

by Anonymous |

ஆகஸ்ட் 5, 2025

உலகப் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் ஜக்கி சான் இறந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. அந்தப் பதிவுகளில், “சோகமான செய்தி: 15 நிமிடங்களுக்கு முன்பு பெய்ஜிங்கில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 30 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் 2016 ஆம் ஆண்டு பிரபலமான ஆஸ்கார் விருது பெற்ற ஜாக்கி சான் என்பது இன்னும் மனவேதனை அளிக்கிறது” என்று அப்பதிவு பகிரப்படுகின்றது.

இந்தப் பதிவுகளை அவதானித்ததில், கடந்த ஜூலை 23 முதல் ஜூலை 29 வரை, பெய்ஜிங் மிகக் கடுமையான கனமழையால் பாதிக்கப்பட்டிருந்தது, இதில் குறைந்தது 30 பேர் இறந்திருக்க முடியும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அனர்த்தத்தில் ஜக்கி சான் இறந்ததாக எந்த நம்பகமான சர்வதேச செய்தி மூலமும் குறிப்பிடப்படவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

மேலும் ஆராய்ந்து பார்த்ததில் ஜக்கி சான் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருவதுடன், இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஜக்கி சான் மதிப்புமிக்க பர்டோ அல்லா கேரியெரா (தொழில் சாதனை) விருதைப் பெற உள்ளார் என்பதையும் அவதானிக்க முடிந்தது. அவர் தனது படங்களான பொலீஸ் ஸ்டோரி மற்றும் ப்ராஜெக்ட் ஏ ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பகிரப்படும் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டதா என ஆராய்ந்து பார்த்ததில், அது முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறிய முடிந்தது.

ஆகவே உலகப் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் ஜக்கி சான் இறந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதையும், இந்த செய்தி பொய்யானது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

#fakenews

வானிலைத் திணைக்களத்தின் இணையதளத்தில் தெரண செய்தியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் போலிச்செய்தி

டிசம்பர் 11, 2025

#explainer

வானிலை திணைக்களத்தின் அறிவிப்புகளும் அரசியல் விமர்சனங்களும்

டிசம்பர் 10, 2025

Related Content

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection