Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • சமூகம்

“சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக தவறாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது

Misleading
Misleading

"சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது; அமெரிக்காவில் எதிர்ப்பை வெளியிட்ட ரணில்" என தலைப்பிடப்பட்டு, 'அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்' என தெரிவிக்கும் செய்தியொன்று "ஒருவன்" இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

by Anonymous |

நவம்பர் 13, 2023

“சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது; அமெரிக்காவில் எதிர்ப்பை வெளியிட்ட ரணில்” என தலைப்பிடப்பட்டு, ‘அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்’ என தெரிவிக்கும் செய்தியொன்று “ஒருவன்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் கடந்த (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாகவும் “ஒருவன்” இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாக “ஒருவன்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியானது தவறான அர்த்தப்படுத்தல் என்பதை factseeker தெரிவிக்க விரும்புகின்றது.

இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “ஹம்பாந்தோட்டை வர்த்தகத் துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைகிறது. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்து வருவதாகவும், சர்வதேச அரங்கில் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

ஜனாதிபதி இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவத்தையும் factseeker இங்கே இணைத்துள்ளது. இந்து – பசுபிக் தீவு

Latest updates

#false

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

#Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

#Misleading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

Related Content

“இட்லி விற்கும் சந்திரயான் -3 பணிப்பாளர்” என தவறான செய்தியை ஊடகங்கள் பிரசுரித்துள்ளன

நவம்பர் 13, 2023

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection