Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சிகிரியாவை இரவில் பார்வையிடலாம் என பகிரப்படுகின்ற செய்தி போலியானவை

Misleading
Misleading

"இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை" என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

by Anonymous |

ஜனவரி 16, 2025

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளமான சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இவை சுற்றுலா பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

இது குறித்து சிகிரியா ரஜமஹா விகாரையிடம் FactSeeker வினவிய போது, சிகிரியா குன்று இரவு நேரத்தில் தோற்றமளிப்பது போன்று பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது என்றும் வழமை போன்று தினமும் அதிகாலை 4.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவிற்கு விஜயம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பொன்றை அவதானிக்க முடிந்தது. அவ்வறிவிப்பில், “இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் “இரவு நேரத்தில் சிகிரியா குன்று மின்விளக்குகளுடன் காட்சியளிப்பது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection