Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சிகிரியாவை இரவில் பார்வையிடலாம் என பகிரப்படுகின்ற செய்தி போலியானவை

Misleading
Misleading

"இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை" என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

by Anonymous |

ஜனவரி 16, 2025

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளமான சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இவை சுற்றுலா பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

இது குறித்து சிகிரியா ரஜமஹா விகாரையிடம் FactSeeker வினவிய போது, சிகிரியா குன்று இரவு நேரத்தில் தோற்றமளிப்பது போன்று பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது என்றும் வழமை போன்று தினமும் அதிகாலை 4.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவிற்கு விஜயம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பொன்றை அவதானிக்க முடிந்தது. அவ்வறிவிப்பில், “இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் “இரவு நேரத்தில் சிகிரியா குன்று மின்விளக்குகளுடன் காட்சியளிப்பது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection