Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அநுரகுமாரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?

False
False

புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் அவ்வாறானதொரு எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கவி்ல்லை என அச்சங்கம் கூறுகின்றது

by Anonymous |

அக்டோபர் 1, 2024

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகை தருவது தொடர்பில் கேள்விக்குறியான சூழல் நிலவுவதாக பதிவுகள் சில சமூக வலைதளங்ககளில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“ஜனாதிபதியின் வருகைக்கு புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக” அப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றியது தொடர்பில் ​​ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையினால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்கவிடம் factseeker வினவிய போது, புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் அவ்வாறானதொரு எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கவி்ல்லை என குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற “குழந்தைகள் புத்தகங்கள் தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவு வரைபுகள்” தொடர்பான கலந்துரையாடலிலும் பங்குபற்றினார் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் Factseeker வினவியபோது, சமூக ஊடகங்களில் குறிப்பிட்டது போன்ற எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை எனவும் ஜனாதிபதி, புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு அரங்குகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும் அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே, “ஜனாதிபதியின் வருகைக்கு புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக” சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection