Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

சனத் நிஷாந்தவின் மரணத்தை கொண்டாட பால்சோறு சமைக்கப்பட்டதாக போலிச்செய்தி

False
False

சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது

by Anonymous |

ஜனவரி 26, 2024

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று (25) காலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, இது தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது.

சனத் நிஷாந்தவின் மரணத்தினால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், பால்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடுவதாகவும் தெரிவித்து, “பொரளையின் தற்போதைய நிலைமை” என குறிப்பிடப்பட்ட புகைப்படமொன்று முகநூல் பக்கத்தில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருவதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனவே, இதன் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது தவறாக பகிரப்படும் செய்தி என்பதை கண்டறிய முடிந்தது. குறிப்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆராய்ந்துபார்த்ததில், இந்தப் புகைப்படம் 2022ல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

https://twitter.com/Dailymirror_SL/status/1523710560692449280

2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்ததை அடுத்து, பஞ்சிகாவத்தை பிரதான வீதியில் மக்கள் பால்சோறு சமைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். இதனை dailymirror ஊடகம் அதன் எக்ஸ் தளத்தில் கடந்த 2022 ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பதிவிட்டிருந்தமை இங்கே இணைக்கப்பட்டுள்ளது,

எனவே, சனத் நிஷாந்தவின் மரணத்தினால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பகிரப்படும் புகைப்படம் போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection