Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

சந்திரயான்-3 விண்கலத்தினால் எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளிகள் போலியானவை

Misleading
Misleading

இவ்வாறு பரவும் காணொளிகள் சந்திரயான்-3 விண்கலத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

by Anonymous |

ஆகஸ்ட் 23, 2023

இந்திய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டுள்ள நிலையில் குறித்த விண்கலத்தினால் நிலவின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளதாக சில காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்துள்ளது. இவ்வாறு பகிரப்படும் காணொளிகள் சுமார் 20 வினாடிகள் பதிவாகியுள்ளன.

இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறு பரவும் காணொளிகள் சந்திரயான்-3 விண்கலத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. குறிப்பாக இந்தக் காணொளிகளை ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச்’ மூலம் ஆராய்ந்து பார்த்ததில் இவை i-Stock மற்றும் Flash movie இணையதளங்களில் பதிவேற்றப்பட்டவை என்பதை கண்டறிய முடிந்தது.

“Textured surface of the moon in motion close-up. Satellite moving along the moon. 3d illustration. Elements of this image furnished by NASA.”( நிலவின் மேற்பரப்பின் கடினமான பரப்பை, நெருங்கிச்சென்று எடுக்கப்பட்ட 3D புகைப்பட விளக்கம். இந்த புகைப்படம் நாசாவால் வழங்கப்பட்டுள்ளது) என தலைப்பிடப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி இந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு பரவிவரும் காணொளி குறித்து இஸ்ரோவின் உத்தியோகபூர்வ பக்கங்களில் ஆராய்ந்தபோதும், அவர்களினால் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நிலவின் புகைப்படங்களை தொகுத்து இஸ்ரோவினால் வெளியிட்டிருந்த காணொளியொன்றை மட்டுமே இறுதியாக பதிவேற்றியுள்ளனர்.

ஆகவே தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் மூலமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளோ அல்லது புகைப்படங்களோ அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection