சந்திரகாந்தன் – வியாழேந்திரன் மோதிக்கொள்வதாக பகிரப்படும் AI காணொளி

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பயன்படுத்தியே இக் காணொளி செயற்கை நுண்ணறிவினால் திரிபுப்படுத்தப்பட்டுள்ளது.
by Anonymous |
மார்ச் 17, 2025

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/r/1ETXL5Mf8s/
சர்ச்சைக்குரிய இக் காணொளியில் உள்ள சில அம்சங்களை உன்னித்து அவதானித்ததில், இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை கண்டறிய முடிந்தது.
மேலும், இக் காணொளி குறித்து ஆராய்ந்த போது, கடந்த மார்ச் 15 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பயன்படுத்தியே இக் காணொளி செயற்கை நுண்ணறிவினால் திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி திரிபுப்படுத்தப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துவதோடு, இது போன்ற AI காணொளிகளை பதிவிடுவதையும் பகிர்வதையும் தவிர்க்குமாறு FactSeeker வலியுறுத்துகிறது.