Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

‘கும்பகர்ணனின் வாள்’ என பகிரப்படும் AI புகைப்படங்கள்

False
False

சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்களாகும்.

by Anonymous |

அக்டோபர் 14, 2024

இந்து புராணமான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதாப்பாத்திரமான கும்பகர்ணனின் வாள் கிடைக்கபெற்றுள்ளதாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“கும்ப கர்ணனின் வாள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, ராமாயணம் நடந்தது என்பதற்கு இதை விட ஒரு ஆதாரம் தேவை இல்லை..ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பதிவுடனேயே அக் காணொளி பகிரப்படுகின்றது. மேலும் அந்த காணொளியில் மிகப்பெரிய வாள்களின் புகைப்படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த காணொளியில் பகிரப்படுகின்ற புகைப்படங்களை Google lens மூலம் ஆராய்ந்து பார்த்ததில் இந்தப் புகைப்படம் பல்வேறு பதிவுகளில் காணப்படுவதுடன்,  இவ்வாறான பல்வேறு பதிவுகளை டிக்டோக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவற்றில் ஒன்று- துருக்கியில் 3,000 ஆண்டுகள் பழமையான ராட்சத வாள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறும் புகைப்படமாகும்.

இன்னொரு பதிவில் – தல்வார் அல்லது துல்வார் என்றும் உச்சரிக்கப்படுகின்ற, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த வளைந்த வாள் என பதிவிடப்பட்டுள்ளது.

இக் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை உன்னிப்பாக அவதானித்ததில் அப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதை அடையாளங்காண முடிந்தது.

உதாரணமாக : புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிதைந்த கைகள், விகிதாசாரமற்ற உடல்கள் மற்றும் இயற்கைக்கு மாறான முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். கூடுதலாக, படங்களில் உள்ள நிழல்கள் சீரற்றவையாகவும், சில முரண்பட்ட திசைகளில் அவர்களின் பார்வைகள் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும், இப் புகைப்படங்களை Is It Ai image Detector மற்றும் Hive Moderation.com ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில் இப் புகைப்படங்கள் 70% க்கு மேல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளவை என குறிப்பிடுகின்றன.

ஆகவே, இராமாயணத்தின் கதாப்பாத்திரமான கும்பகர்ணனின் வாள் கிடைக்கபெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection