Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

புதிய பாப்பரசர் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

by Anonymous |

மே 7, 2025

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவை அடுத்து, புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான சம்ரதாய நடைமுறைகள் தற்போது வத்திக்கானில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (07 )புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

புதிய பாப்பரசராக தெரிவாகுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் கார்டினல்களின் பெயர்கள் மற்றும் தகவல்களின் பட்டியல் இங்கே:

https://www.catholic-hierarchy.org/bishop/scardc3.html

கத்தோலிக்க சமூகத்திற்கு மிகவும் பரபரப்பான செய்தியாக இருக்கும் இந்த நேரத்தில், கொழும்பின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தெரிவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும், புதிய பாப்பரசர் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சர்வதேச ஊடகங்களோ தேசிய ஊடகங்களோ அவ்வாறான செய்திகளை பிரசுரிக்கவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. புதிய பாப்பரசரை நியமிப்பதற்கான மாநாடு, மே 7, 2025 அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1.30 மணி ) செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் பொது திருப்பலியுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த சில புதிய வெளிநாட்டு செய்திகள் இங்கே:

https://www.bbc.com/news/articles/c15v5n0knv3o
https://www.abc.net.au/news/2025-05-07/conclave-begins-to-elect-new-pope/105240966

ஆகவே, 267வது பாப்பரசராக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தேர்ந்தெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection