Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் தலைமையில் “தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம்” என போலிச்செய்தி பகிரப்படுகின்றது

False
False

எதிர் வரும் நாட்களில் போராட்டம் எதுவும் எங்களால் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் FactSeeker யிடம் தெரிவித்தார்.

by Anonymous |

பிப்ரவரி 6, 2025

“தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம்” என்ற தலைப்பில் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இப் போராட்டமானது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெறப்போவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

மிக நீண்ட காலமாக சர்ச்சையில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினையானது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள இந்நிலையில், இப் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகப்பூர்வ x மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த செய்தி போலியானது என பதிவிட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

https://x.com/GGPonnambalam/status/1886335664091713678

https://www.facebook.com/photo?fbid=122132663036574891&set=a.122118766076574891

மேலும், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் FactSeeker வினவிய போது, “எனது தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிக்கப்போவதாக பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் பொய்யானது என்றும், எதிர் வரும் நாட்களில் போராட்டம் எதுவும் எங்களால் ஒழுங்குபடுத்தப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம் இடம்பெறப் போவதாக பகிரப்படும் புகைப்படத்துடனான பதிவானது உண்மைக்கு புறம்பானது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் எந்தவொரு போராட்டமும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection