Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகம் இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக போலிச்செய்தி

False
False

'ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எதனையும் நடத்தவில்லை. பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது'

by Anonymous |

ஜூலை 19, 2024

இலங்கையில் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாகவும், அதில் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தற்போது முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில், கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அமைய வாக்காளர் விருப்பங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 53 சதவீதமானவர்கள் திசைகாட்டி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 24% வாக்குகளை பெற்றுள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 5% க்கும் குறைவான மக்கள் ஆதரவை பெற்றுள்ளார் எனவும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் (12%) இன்னும் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை எனவும், இருப்பினும் திசைகாட்டி கட்சியின் மீதான நம்பகத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் நாட்டின் செழிப்பை மேம்படுத்துவதற்கும் உள்ள அர்ப்பணிப்பு காரணமாக வாக்காளர்கள் மத்தியில் NPP கட்சி செல்வாக்கு செலுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் factseeker இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும், அவர்களது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்திலும் ஆராய்ந்த போது அவர்கள் அவ்வாறான அறிவிப்புகள் எதனையும் விடுத்திருக்கவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் ஊடக பிரிவிடம் factseeker வினவியபோது தம்மால் அவ்வாறான எந்தவொரு ஆய்வினையும் முன்னெடுக்கவில்லை எனவும், இது முற்றிலும் போலியான செய்தி எனவும் உறுதிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது குறித்து அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளனர். அதில், ‘ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எதனையும் நடத்தவில்லை. பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது ‘ எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தினால் இலங்கையில் தேர்தல் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியதாக ‘லங்கா ஈ நியூஸ்’ தெரிவித்துள்ள செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection