Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி தெரிவித்ததாக பகிரப்படும் போலிச் செய்தி

False
False

இச் செய்தி முற்றிலும் பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினர் FactSeeker க்கு தெரிவித்தனர்.

by Anonymous |

மார்ச் 3, 2025

“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக புகைப்படத்துடனான செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“Esana” செய்தி தளத்தில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டுவருகின்றன. இது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அப் பதிவில் “அதிக செலவு செய்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும், அதிக கொடுப்பனவுகளை கொடுக்க முடியாது” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்தி “Esana” செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் 2024.02.06 அன்று “Esana” செய்தி தளத்தினால் வெளியிடப்பட்ட வேறொரு செய்தியின் புகைப்படமாகும். ஆகவே. இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் வேறொரு செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை திரிபுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும், இச் செய்தி அரசுத் தரப்பிலோ, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களிலோ அல்லது பிரதான செய்தித்தளங்களிலோ வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, இச் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தெரிவித்தனர்.

ஆகவே, “எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

සිංහල

|

English

|

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection