Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி தெரிவித்ததாக பகிரப்படும் போலிச் செய்தி

False
False

இச் செய்தி முற்றிலும் பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினர் FactSeeker க்கு தெரிவித்தனர்.

by Anonymous |

மார்ச் 3, 2025

“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக புகைப்படத்துடனான செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“Esana” செய்தி தளத்தில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டுவருகின்றன. இது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அப் பதிவில் “அதிக செலவு செய்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும், அதிக கொடுப்பனவுகளை கொடுக்க முடியாது” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்தி “Esana” செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் 2024.02.06 அன்று “Esana” செய்தி தளத்தினால் வெளியிடப்பட்ட வேறொரு செய்தியின் புகைப்படமாகும். ஆகவே. இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் வேறொரு செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை திரிபுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும், இச் செய்தி அரசுத் தரப்பிலோ, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களிலோ அல்லது பிரதான செய்தித்தளங்களிலோ வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, இச் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தெரிவித்தனர்.

ஆகவே, “எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

සිංහල

|

English

|

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection