Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #explainer

எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள் வருமாயின் அது எவ்வாறு ?

Factual
Factual

100 ரூபாய் தாள்கள் இருமாதங்களுக்கு ஒருமுறையும் 5000 ரூபாய் தாள்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படுகின்றன.

by Anonymous |

நவம்பர் 5, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்படலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்து தொடர்பில் விமர்சன பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அவை பல்வேறு விமர்சனங்களுடன் பகிரப்படுவதால் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வணிக பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வருமாறு பதிலளித்தார்,

“இலங்கை மத்திய வங்கி பழைய நாணயத் தாள்களை அழித்து புதிய நாணய த் தாள்களை அச்சிடுவது வழக்கமான செயல்முறை ஆகும். இது புதிய பணத்தை அதிகரிக்க அல்ல, பழையவற்றை அழித்து புதிதாக வெளியிடும் நடைமுறையாகும். எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் வரக்கூடும், இது சாதாரண நடைமுறை ஆகும்.” என்று அவர் தெரிவித்தார்.
LINK :-https://www.youtube.com/watch?v=xThOaC4w4HU&t=210s

அதன்படி, பழைய/பயன்பாட்டுக்கு தகாத நாணயத்தாள்களை மாற்றி புதிய நாணயத்தாள்களை வெளியிடும் செயல்முறை தொடர்பில் FactSeeker ஆராய்ந்தது.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, இலங்கையில் நாணயத்தை வெளியிடுவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,இலங்கையின் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை உருவாக்குதல்,அச்சிடுதல் மற்றும் விநியோகம் ஆகிய பணிகள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேவைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி போதுமான நாணயங்கள் மற்றும் நாணயத்தாள்களை கையிருப்பில் வைத்துள்ளது. இப்பணம் பின்னர் வணிக வங்கிகளின் கையிருப்பாக மத்திய வங்கிக்கு மீண்டும் திரும்புகின்றது.

இந் நாணயத் தாள்கள், நாணயத்தாள் பரிசோதனை இயந்திரங்கள் மூலம் சரிசெய்யப்பட்டு, எண்ணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டிற்கு பொருந்தாத நாணயத்தாள்கள் இந்த செயல்முறையிலேயே சிறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்படுகின்றன. பயன்பாட்டுக்கு தகுந்த நாணயங்கள் மீண்டும் வணிக வங்கிகளுக்கு வெளியிடப்படுகின்றன.

இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தனவிடம் FactSeeker வினவிய போது, இந்த வழக்கமான பண நாணய முகாமைக்காக, இலங்கை மத்திய வங்கி பயன்பாட்டுக்கு தகாத தாள்களை அழித்து அவற்றுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்களை வெளியிடுகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் நாணயத்தைப் பயன்படுத்தும் முறைமைக்கு அமைய சில நாணயத்தாள்கள் விரைவாக பழுதடைகின்றது என்றும் 100 ரூபாய் தாள்கள் இருமாதங்களுக்கு ஒருமுறையும் 5000 ரூபாய் தாள்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படுகின்றன என்றும் மத்திய வங்கி மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான அளவு நாணயங்களை தக்க வைத்திருப்பதாவும் புதிய நாணயங்களை விநியோகிக்க சுமார் ஆறு மாத காலம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய நிதி அமைச்சரும் அல்லது மத்திய வங்கியின் ஆளுநரும் பொறுப்பேற்றபின், அவர்களுடைய கையொப்பத்தின் மாதிரி (specimen signature) பெறப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள ” டீலாரூ” (de la Rue) நிறுவத்திற்கு அனுப்பப்படும் என்றும் புதிய நாணயத் தாள்களை அச்சிடும்போது, அந்தக் கையொப்ப மாதிரிகள் பயன்படுத்தப்படும் என்றும் டபிள்யூ.ஏ.விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

ஆகவே, எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் வெளியிடப்படும் பட்சத்தில் அவை இது புதிய பணத்தை அதிகரித்தல் என கருதப்பட முடியாது எனவும், பழைய பணத்தை அழித்து புதிதாக வெளியிடும் நடைமுறையாகும் என்பதாகவும் என factseeker வலியுறுத்துகின்றது.

Latest updates

#false

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

#Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

#Misleading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

Related Content

கஜகஸ்தான் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தார்களா?

டிசம்பர் 27, 2024

சீன நன்கொடையால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள்: முன்னாள் கல்வி அமைச்சரின் பங்களிப்பா?

டிசம்பர் 20, 2024

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததா?

டிசம்பர் 12, 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாதா ?

நவம்பர் 26, 2024

அரசாங்கம் 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததாக வெளிவரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன ?

நவம்பர் 4, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection