Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் என பகிரப்படும் போலிச்செய்தி

Factual
Factual

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்ப்பில் "இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பகிரப்படும் பதிவுகள் முற்றிலும் உண்மையற்றவை" என குறிப்பிடபட்டிருந்தது.

by Anonymous |

பிப்ரவரி 13, 2025

இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இப் பதிவுகள் அதிக பயனர்களிடம் சென்றடைவதால் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.

அப் பதிவுகளில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இலச்சினை பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், நபர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்றும் நாளாந்தம் ரூ.15,000 தொடக்கம் ரூ.30,000 வரை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பொன்றை அவதானிக்க முடிந்தது. அவ்வறிவிப்பில், “இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பதிவுகள் பகிரப்படுவதாகவும் அவை முற்றிலும் உண்மையற்றவை” என்றும் குறிப்ப்பிடப்பட்டிருந்தது.

https://www.facebook.com/share/p/1BxGJmhxnh/

மத்திய வங்கியின் வேலை வாய்ப்பு தகவல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

https://www.cbsl.gov.lk/

ஆகவே, இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection