Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய பணியாளர் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக போலிச்செய்தி

False
False

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

by Anonymous |

டிசம்பர் 6, 2024

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும், உடனடியாக விண்ணப்பிக்குமாறும் செய்தியொன்று Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்டுவருகின்ற செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

“இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு பணியாளர் ஆட்சேர்ப்பு 2024/2025″

தற்போது கிடைக்கக்கூடிய பல்வேறு பதவிகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இணைய விண்ணப்ப தளம் திறக்கப்பட்டுள்ளது, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். அனைத்து இலங்கைப் பொதுமக்களும் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் இலவசம். வேலை வாய்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன, இப்போதே விண்ணப்பியுங்கள். இந்த சிறந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் ” என பகிரப்படும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி பலரால் பகிரப்படுவதால்,FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க எண்ணினால், அது வர்த்தமானி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் FactSeeker வினவிய போது, ​​அவ்வாறான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான தவறான தகவல்களை நம்பி இணைப்புகளை (Link) அணுகுவதே தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையம் (Sri Lanka Cert ) தெரிவித்துள்ளது.

ஆகவே, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்திகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection