Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

இலங்கை -இந்தியாவுக்கு இடையில் எல்லை தொடர்பான உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவில்லை

False
False

இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான 'The Hindu' வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல எனவும், இந்த செய்தி தவறானது எனவும் FactSeeker தெரிவிக்கின்றது.

by Anonymous |

ஜூலை 3, 2024

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான ‘The Hindu’ கடந்த மாதம் (28) செய்தி வௌியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விபரங்கள் வௌியிடப்படவில்லை என இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து இலங்கையின் ஊடகங்களிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வெளிவர ஆரம்பித்ததை அடுத்து factseeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.

இலங்கை- இந்தியாவிற்கு இடையில் இது குறித்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளதா என வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் factseeker வினவியபோது அவ்வாறான உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொள்ளப்படவில்லை எனவும், அதற்கான அறிக்கைகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் நேரடியாக factseeker வினவிய போது, “இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் எதனையும் தாம் மேற்கோள்ளவில்லை, அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென” வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “இலங்கையைப் பொறுத்த வரையில் இவை 50 வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடயங்கள்” என்றார்.

factseekerக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பாக்கு நீரிணை கடற்பரப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான ‘The Hindu’ வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல எனவும், இந்த செய்தி தவறானது எனவும் FactSeeker தெரிவிக்கின்றது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

Related Content

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection