Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

இது லால்காந்த அண்மையில் தெரிவித்த கருத்தா ?

Factual
Factual

இந்த காணொளி 03.11.2013 அன்று ஜே.வி.பி ஸ்ரீலங்கா யூடியூப் என்ற பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது

by Anonymous |

ஜூலை 24, 2024

தனது ஆட்சியின் கீழ் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கை வெளியேறும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த கூறிய காணொளியொன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இந்தக் காணொளி X பக்கத்திலும் அதேபோல் முகநூல் பக்கத்திலும் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

தேசிய மக்கள் சக்தியின் அண்மைய பிரசார கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும், தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அக்கட்சியை விமர்சிக்கும் விதத்திலும் இந்தப்பதிவு பலராலும் பகிரப்படுகின்றது.

இந்தக் காணொளியை மேற்கோள்காட்டி லங்கா சீ நியூஸ் மற்றும் எலகிரி (Elakiri) என்ற இணையத்தளங்கள் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த இவ்வாறான கருத்தை வெளியிட்டாரா? எப்போது வெளியிட்டார் என factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது ​​2013ஆம் ஆண்டு நவம்பரில் அவர் தெரிவித்த கருத்து என்பது தெரியவந்துள்ளது.

இந்த காணொளி 03.11.2013 அன்று ஜே.வி.பி ஸ்ரீலங்கா யூடியூப் என்ற பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன், அந்த மக்கள் சந்திப்பில் லால்காந்த இந்தக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பதையும் factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.

Link :https://youtu.be/h2gjO05ZWJA?t=1009

இதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்தவின் இந்தக் கூற்று அண்மைக்கால அறிக்கையல்ல எனவும் எனினும் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்து எனவும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

மே 14, 2025

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஏப்ரல் 2, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

மார்ச் 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection