Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • சமூகம்

“இட்லி விற்கும் சந்திரயான் -3 பணிப்பாளர்” என தவறான செய்தியை ஊடகங்கள் பிரசுரித்துள்ளன

Misleading
Misleading

"இட்லி விற்கும் சந்திரயான் -3 பணிப்பாளர்" என்ற தலைப்பில் ஒரு செய்தி இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

by Anonymous |

நவம்பர் 13, 2023

“இட்லி விற்கும் சந்திரயான் -3 பணிப்பாளர்” என்ற தலைப்பில் ஒரு செய்தி இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.  இலங்கையில் வெளியாகும் TamilMirror.lk இணைய பத்திரிகையில் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியும், அதேபோல் இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான சன்நியூஸ் உள்ளிட்ட சில ஊடகங்களிலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ‘இஸ்ரோவின் ‘சந்திரயான் 3′ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியலாளர் தீபக் குமார் உப்ரரியா என்பவருக்கு 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால், செலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகிறார். காலையில் அலுவலகம் செல்லும் இவர் மாலையில் இட்லி விற்று வருகிறார்’ என இந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது தொடர்பாக பிபிசி ஹிந்தி செய்தித்தளத்தில் வெளியான ஒரு கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து ‘PIB Fact check’ (Press Information Bureau) தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கடந்த செப்டெம்பர் 18ம் திகதி பதிவிட்டிருந்த ஒரு பதிவினை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அதில், 2003 செம்டெம்பர் மாதம் முதல் 2010 ஜனவரி வரையில் HEC (Heavy Engineering Corporation) இஸ்ரோவிற்கு சில உற்கட்டமைப்புகளை வழங்கியது உண்மையே, ஆனால் சந்திரயான் -3க்கான எந்த ஒரு பொறியியல் உபகரணங்களையும் தயாரிக்க HECயிடம் ஒப்படைக்கப்படவில்லை. எனவே பிபிசி இட்டுள்ள தலைப்பு தவறானதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ​​பரிமள் நாத்வானி இது தொடர்பாக பாராளுமனறத்தில் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அதற்கு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சகம் அளித்த பதிலும் இந்திய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆவணத்தின் படி ​​பரிமளா நாத்வானி அவர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் :

1. சந்திரயான்-3க்கு ஏவுதளம் மற்றும் பிற பாகங்களைத் தயாரிக்க ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (HEC) ராஞ்சி பிரிவு த்ருவா-விற்கு ஒதுக்கப்பட்டது என்பது உண்மையா?

2. HEC அல்லது அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை பிரிவுகள் சந்திரயான்-3 ஏவுதலை வெற்றிகரமாகச் செய்வதில் பங்களித்ததா?

3. HEC-ன் நிதி மற்றும் செயல்பாட்டு ஆரோக்கியத்தின் நிலை அறிக்கை.

4. சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள்/ தொழில்நுட்ப நிபுணர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையா?அப்படியானால் அதன் உண்மைத்தன்மை என்ன? இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு கனரக தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ கிரிஷன் பால் குர்ஜரின் வழங்கியுள்ள பதிலில், சந்திரயான்-3க்கான எந்த பாகங்களையும் தயாரிக்க HECக்கு ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், HEC ஆனது 2003 செப்டெம்பர் முதல் 2010 ஜனவரி வரையில் இஸ்ரோவின் உள்கட்டமைப்புக்காக ‘Mobile Launching Pedestal (MLP) and Hammer Head Tower Crane(10T), 400/60 T EOT crane, Folding cum Vertical Repositionable Platform (FCVRP) மற்றும் Horizontal sliding Doors (HSD)’ ஆகியவற்றை வழங்கியது. மேலும், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், HEC ஒரு தனிச் சட்ட நிறுவனம். அதன் பணியாளருக்குச் சம்பளம் வழங்க தன் சொந்த ஆதாரங்களை அது உருவாக்க வேண்டும். தொடர்ச்சியான இழப்புகள் மற்றும் பெரும் பொறுப்புகள் காரணமாக, HEC கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் முறையே 14 மற்றும் 18 மாதங்கள் செலுத்தப்படாமல் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 11ம் திகதி ‘The New Indian Express’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியிலும் இத்தகவல்கள் உள்ளன. பிபிசி இந்தி தொலைக்காட்சிக்கு HEC பணியாளரே செவ்வியொன்றை வழங்கியுள்ளார். அவரை சந்திரயான்-3க்கான ஏவுதளம் வடிவமைத்தவர் எனத் தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளன என சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

முடிவு

ஆகவே இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் பிரசுரமாகியுள்ள இந்த செய்தியில், சந்திரயான்-3 ஏவுதளம் வடிவமைத்தவருக்கு 18 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது தவறான செய்தியாகும். அத்துடன் அவர் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (HEC) ஊழியராக பணியாற்றுகின்ற போதிலும், அந்நிறுவனம் சந்திரயான்-3க்கான எந்த பாகங்களையும் வழங்கவில்லை என இந்திய அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 18 மாதமாகச் சம்பளம் வழங்காதது உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Latest updates

#Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

#Misleading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

#FAKE

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

Related Content

“சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக தவறாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 13, 2023

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection