Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் கருத்து தவறானது

False
False

காணி அபகரிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் வர்த்தமானி எதனையும் வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்த கருத்து தவறானது.

by Anonymous |

மே 5, 2025

சக்தி தொலைக்காட்சியில் கடந்த மே தினத்தன்று (01 ) ஒளிபரப்பான சமர் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம், அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.”மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் வர்த்தமானியை அரசாங்கம் ரத்து செய்யமாட்டார்களா?” என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கூற்றை மேற்கோள்காட்டியே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி – சுமந்திரன் அவர்கள் மேதின கூட்டத்தில் ஒரு சவால் விடுத்திருந்தார். “யாழ்ப்பாணத்திலே 5940 ஏக்கர் காணி கபளீகரம் செய்யும் அரசாங்கம். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். சவால் விடுக்கின்றோம். மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் வர்த்தமானியை ரத்து செய்ய மாடீர்களா?” என கேட்கிறார். இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,”இன்றைக்கு அவ்வாறான வர்த்தமானியை எமது அரசாங்கம் வெளியிட்டதாக சிரிப்பாக இருக்கிறது. அவர் எதை வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறான பல போலியான தகவல்களை வெளியிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது குறித்துக் கருத்து தெரிவித்தாரா என FactSeeker ஆராய்ந்த போது,மே மாதம் 01ஆம் திகதி இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.மேலும்,காணி அபகரிப்பு தொடர்பான ஒரு காணொளியையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

  • https://www.facebook.com/share/v/1PYqZKbUFn/

அக் காணொளியில், காலை முரசு பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டே தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.

மேலும், காலை முரசு பத்திரிகையை ஆராய்ந்த போது, மே மாதம் 1 ஆம் திகதி அப் பத்திரிகையில் “வடக்கில் 5940 ஏக்கர் நிலத்தை அரசு இரகசியமாகக் கபளீகரம்!” என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியாகியிருந்தது . அச் செய்தியில் “வடக்கு மாகாணத்தில் ஐயாயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததில், இந்த வர்த்தமானியானது கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி காணி தொடர்பான வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் அதில் 2430 இலக்கமிட்ட அவ் வர்த்தமானியில் “வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால்,அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அவ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://documents.gov.lk/view/gazettes/2025/3/2025-03-28(III-0)T.pdf

ஆகவே, கடந்த மே மாதம் 1 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமர் அரசியல் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் வர்த்தமானி எதனையும் வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்த கருத்து தவறானது என்பதையும் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி காணி தொடர்பான வர்த்தமானி ஒன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection