Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

அரகலய போராட்டத்தின் போது நாட்டை விட்டு வெளியேறியது நாமலில் ‘அப்பா’ அல்ல

Misleading
Misleading

“அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என எழுதப்பட்ட பதிவினையே சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு தவறானது என்பது factseeker சுட்டிக்காட்டுகின்றது.

by Anonymous |

அக்டோபர் 12, 2023

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக் ஷ அண்மையில் இந்தியாவின் தந்தி TVக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்த நேர்காணலுக்கான விளம்பரமொன்றை தந்தி TV தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதில் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரப்படமே தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டை விட்டு வெளியேறியது நாமலின் தந்தையா என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டிருப்பதை factseeker அவதானித்தது.

இது குறித்து தந்தி TVயின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடிப்பார்த்ததில், அவர்களது ட்விட்டரில் “சித்தப்பா கோத்தபய ராஜபக்சே வெளியேறியது தவறு” என்ற விளம்பரப் பதிவையே அவதானிக்க முடிந்தது.

எனினும், தந்தி TV முதலில் பதிவிட்டிருந்த பதிவில் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என காணப்பட்ட நிலையில் அதனை நீக்கிவிட்டு “சித்தப்பா கோத்தபய ராஜபக்சே வெளியேறியது தவறு” என திருத்தி எழுதப்பட்ட பதிவே தற்போது உள்ளது.

எனினும் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என எழுதப்பட்ட பதிவினையே சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு தவறானது என்பது factseeker சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக் ஷ என்பதுடன், அவர் நாமல் ராஜபக் ஷவின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.

தந்தி TVக்கு நாமல் ராஜபக் ஷ வழங்கிய நேர்காணல் முழுமையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

https://www.thanthitv.com/News/Politics/if-bjp-wins-in-tamil-rajapakshe-will-win-in-north-exclusive-interview-with-namal-rajapaksa-218500?infinitescroll=1

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection