Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #NPP #canada #factchecked

அநுரவின் கூட்டத்தின்போது தமிழ் இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டாரா?

Factual
Factual

தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த இளைஞனை அரங்கை விட்டு வெளியேற்றியதாக காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது

by Anonymous |

மார்ச் 27, 2024

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த இளைஞனை அரங்கை விட்டு வெளியேற்றியதாக காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த இளைஞன் ஏன் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எக்ஸ் தளத்தில் எழுப்பப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இந்த நிகழ்வில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதா? உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்பதை factseeker ஆராய்ந்து பார்த்தபோது, கேள்வி எழுப்பிய இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பதையும், குறித்த இளைஞனின் கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக பதில் தெரிவித்துள்ளார் என்பதையும் factseeker இனால் கண்டறிய முடிந்தது.

அத்துடன், குறித்த நிகழ்வில் பங்குபற்றிய வேறொரு நபர் நிகழ்வின்போது தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிப்படுத்தி, நிகழ்வில் ஏனையோர் கலந்துரையாட இடமளிக்காது இடையூறு விளைவித்த வேளையில், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும், நிகழ்வில் கேள்வி எழுப்பியிருந்த குறித்த இளைஞனின் கேள்விக்கு அனுரகுமார திசாநாயக பதில் தெரிவித்திருந்தார் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் factseekerஇடம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு தொடர்பான முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது,
நிகழ்வில், குறித்த இளைஞன் கேள்வி எழுப்புவதையும் அதற்கு அனுரகுமார திசாநாயக வழங்கிய பதிலையும் இங்கே பார்க்கலாம்.

link :https://youtu.be/vIJqwQOJ97Q?t=8602

முடிவு :

ஆகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைப்போன்று, கனடாவில் டொரென்டோ நகரில் நடத்திய மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அவரை அரங்கை விட்டு வெளியேற்றியதாக பகிரப்படும் கருத்து உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection