Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வேலையில்லாத இளைஞர்களுக்கு 50,000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

False
False

இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு கூறுகின்றது

by Anonymous |

அக்டோபர் 23, 2024

“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக பதிவொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.அப் பதிவில்,

“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024”

“இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு வேலையில்லாத குடிமக்களுக்கு ஊதியம் வழங்கவும் இழப்பீடு வழங்கவும் 50,000 ரூபாய் மானிய நிதிக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் மத்தியில் இருக்க இப்போதே விண்ணப்பிக்கவும்.விண்ணப்பதாரர்கள் இலங்கையின் குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.உங்கள் விண்ணப்பத்தை இப்போது சமர்ப்பிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் factseeker வினவிய போது, அவ்வாறான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவிடம் Factseeker வினவிய போது, இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும், அவ்வாறான இணைப்புகளை திறந்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.

ஆகவே, “இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற பதிவு போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection