தெற்காசியாவின் சிறந்த முன்மாதிரியான அரசியல் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எனவும், ஆனால் இலங்கை மக்கள் ஏன் அவரை தமது தலைவராக தெரிவுசெய்யவில்லை எனவும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாக இலங்கையில் உள்ள நியூசிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளின் அரசியல் செயற்பாடுகள் குறித்து நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் கருத்து வெளியிடுவதில்லை எனவும், குறிப்பாக மக்கள் வாக்களிக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் குறித்தும் கருத்து வெளியிடுவதில்லை எனவும் கொழும்பில் உள்ள நியூசிலாந்து தூதரகத்தின் ஊடக அதிகாரி சுமுது ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முடிவுரை
எனவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்தி தவறானது.