“இலங்கையர்களால் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.
அவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அதி முக்கிய நபர்களுக்கான(VIP) சலுகைகளை கோரியுள்ளனர், அத்தோடு, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தங்கள் கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை எடுத்துக்கொண்டு மற்ற பயணிகளுடன் வரிசையில் காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
கோத்தாவும் பசிலும் வரிசையில் நிற்க விரும்பாததால் விமானங்கள் புறப்பட்டன. இப்போது அவர்கள் இரத்மலானை மற்றும் மத்தள விமான நிலையங்களில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றனர்.” எனும் உள்ளடக்கத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவுகிறது.
மேற்படி புகைப்படத்தின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தும் வகையில், நாம் மேற்கொண்ட பரிசோதனையில் இப்புகைப்படமானது 16.01.2020 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் என தெரியவந்தது.
எனவே, இன்று விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகப் பகிர்கின்ற ஜனாதிபதியின் புகைப்படம், 16.01.2020 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின்போது பெறப்பட்ட புகைப்படம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.