நாட்டரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“ஒரு கிலோ உள்ளூர் சுப்பர் நாட்டு அரிசியை ஒரு ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் யாழ்ப்பாண மக்களுக்கு நேற்று (22) கிடைத்துள்ளது.
விலைவாசி உயர்வினால் ஏற்பட்டுள்ள அழுத்தத்திலிருந்து மக்களை விடுவித்து, மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் இருக்கும் சிக்கலிலிருந்து அவர்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை சுமித்ரயோ அமைப்பினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி பெறக்கூடிய வாய்ப்பு யாழ்ப்பாண மக்களுக்கு கிடைத்தது.”
சுமித்ரயோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு வழங்கப்பட்டமை உண்மையாகும்.
எனினும் ” 1 கிலோ நாட்டரிசி, ஒரு ரூபாய்’ என்ற தலைப்பு தவறாக வழிநடாத்துவதாகும்.