“உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்ற வாசகத்துடன் நடிகர் சரத் சந்திரசிறியின் புகைப்படத்துடன் கூடிய பல முகநூல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேற்படி பதிவுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சரத் சந்திரசிறி, உயர் இரத்த அழுத்தத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்தோம்.
இது தொடர்பில் சரத் சந்திரசிறியின் புதல்வரான திலக்ஷன விதானகே முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.
மூலம்
மேலும், சரத் சந்திரசிறி மரணிக்கவில்லை என பல ஊடகங்கள் இந்த செய்தியை தெளிவுபடுத்தியுள்ளன.
எனவே சரத் சந்திரசிறி காலமானார் என பரப்பப்படும் செய்தி பொய்யானது எனவும் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.