“தடுப்பூசி இறக்குமதி செய்ய பணம் இருக்கிறது, ஆனால் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த பணம் இல்லை” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாக ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியொன்றின் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தொடர்புடைய இணைப்பு: https://bit.ly/2WgUzDD
அண்மையில் ஜோசப் ஸ்டாலின் ஈடுபட்டிருந்த போராட்டங்களின் போது இதுபோன்ற எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது எமது ஆய்வில் தெரியவந்தது. அத்தோடு இதுபோன்ற எந்த செய்தியும் ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்த படம் 2020 ஜூன் 16 அன்று நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளிலிருந்து பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 16, 2020 அன்று ஹிரு தொலைக்காட்சி இதுபோன்ற எந்த காணொளியையும் தமது தொலைக்காட்சியில் வெளியிடவில்லை என்பதோடு, அப்பதிவை முன்னிலை சோஷலிச கட்சி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதும் உறுதி செய்யப்பட்டது. ஹிரு தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ இலச்சினையைப் பயன்படுத்தி இச்செய்தி போலியாக பகிரப்பட்டுள்ளது.
தொடர்புடைய இணைப்பு: https://bit.ly/3y10Ilr
இது குறித்து நாம் ஜோசப் ஸ்டாலினிடம் வினவியபோது, “தடுப்பூசியை இறக்குமதி செய்ய பணம் இருக்கிறது, ஆனால் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த பணம் இல்லை” என ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படதாக பரவும் பதிவு போலியானது என உறுதிப்படுத்தப்படுகிறது.