“நான் எஸ். டி. கவிந்தி (077 #######), களனி பல்கலைக்கழக மாணவி. இது என்னால் உருவாக்கப்பட்டது. இந்த செய்தியை 5 குழுக்களுக்கும் 5 நண்பர்களுக்கும் பகிரவும். உங்கள் தொலைபேசியில் டேட்டா பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும். டேட்டா அட்டைகள்(Data Cards) இனி தேவையில்லை. இது 100% உண்மை. இது சரியாக தொழிற்படவில்லையென்றால் என்னை குற்றம் சுமத்த முடியும்.” என ஒரு செய்தி பரவி வருகிறது.
மேலும், “இந்த ஆண்டு சர்வதேச ஆன்லைன் கண்டுபிடிப்பு போட்டியில் முதல் இடம் பெற்ற மென்பொருள் இது. இது 100% உண்மை. இது செயல்படவில்லை என்றால், உங்களுக்கு 50,000ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்” எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியின் உண்மைத்தன்மையை அறிய, அச்செய்தியில் குறிப்பிடப்பட்ட நபரை நாங்கள் அணுகினோம், டி.கவிந்தி, இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். யாரோ ஒருவரால் தனக்கு தீங்கிழைக்கும் வகையில் இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தாயார்நிலை குழு(SLCERT) மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு (TRCSL) முறைப்பாடளிப்பதாக அவர் மேலும் கூறினார்.
“சிலர் போலி செய்திகளை உருவாக்கி தனிப்பட்ட தரவை சேகரிப்பார்கள். மற்றவர்கள் மக்களை தனிப்பட்ட முறையில் தாக்க போலி செய்திகளை உருவாக்குகிறார்கள். இந்த செய்தி முதல் பார்வையில் ஒரு புரளி போல் தெரிகிறது.” என புழக்கத்தில் இருக்கும் இந்த போலி செய்திகள் குறித்து இலங்கை கணினி அவசர தாயார்நிலை குழுவின் ஊடக பிரிவு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.
எனவே வாட்ஸ்அப்பில் பரவும் இந்த செய்தி ஒரு போலி செய்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.