25.06.2021 அன்று ஒளிபரப்பப்பட்ட தனது சொந்த உரையை இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொலைக்காட்சியில் பார்ப்பதைப் போன்ற புகைப்படமொன்று ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பாகியதன் பின்னர் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்த புகைப்படங்களை பயன்படுத்திய சில பதிவுகள் பின்வருமாறு:
https://cutt.ly/bmoivkh
https://cutt.ly/Pmoi3ma
இப்புகைப்படம் குறித்த தொழில்நுட்ப விசாரணையில் இது நகைச்சுவையுணர்வுடன் திருத்தியமைக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதற்கான அசல் புகைப்படமானது 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருந்தபோது ஜனாதிபதி ஒரு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியபோது பெறப்பட்டது என்பதும் தெரியவந்தது. (அசல் படத்திற்கான இணைப்பு – https://cutt.ly/Omp7AUp)
இதேவேளை “ஜனாதிபதி ஜனாதிபதியைப் பார்க்கிறார்” என்ற தலைப்பில் 27.06.2021 அன்று அச்சிடப்பட்டு வெளியான “தி சண்டே டைம்ஸ்” பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்த புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அதே நாளில் (27.06.2021) வெளியிடப்பட்ட “தி சண்டே டைம்ஸ்” இன் மின்னிதழ் அதே செய்தியைக் கொண்டிருக்கவில்லை. மாறாக பசளை தொடர்பான ஒரு முக்கிய செய்திக்கதையை வெளியிட்டிருந்தது. (மின்னிதழிற்கான இணைப்பு: https://bit.ly/361ECD8)
அதன்படி, சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமும், அச்சிடப்பட்டு 27.06.2021 அன்று பிரசுரமான “தி சண்டே டைம்ஸ்” பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படமும் திருத்தியமைக்கப்பட்ட புகைப்படங்களே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.