டயலொக் நிறுவனம் தனது 30 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 500 வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்குவதாகக் கூறி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
இந்த செய்தி 4 கேள்விகளைக் உள்ளடக்கியுள்ளது.
அக்கேள்விகளுக்கு பதிலளித்தவுடன், பயனர்கள் திரையில் தோன்றும் 9 பரிசு பெட்டிகளில் 3 ஐ திறந்து 3 பரிசு பெட்டிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். சரியான பெட்டியைத் தேர்ந்தெடுத்தவுடன், அவர்கள் 5 குழுக்கள் அல்லது 20 தனிப்பட்ட நண்பர்கள் மத்தியில் வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர் வழியாக செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு பரிசைப் பெறுவதற்கான பதிவை நிறைவு செய்ய தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.
இந்த செய்தி தொடர்பான விசாரணையில், டயலொக் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் இதுபோன்றதொரு போட்டியை ஆரம்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தள முகவரிக்கு டயலொக் நிறுவனத்துடன் நேரடி தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது.
செய்தி குறித்து டயலொக் நிறுவனத்திடம் வினவியபோது, டயலொக்கின் ஊடகப் பிரிவு தங்களுக்கு இந்த செய்தியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன், இவ்வாறான இணைப்புகளின் கீழ் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் கூறினர்.