“வாகரை விவசாயிகள் பருப்பை பயிரிட்டு அறுவடை செய்கிறார்கள். ‘சேர்’ தோல்வியடைந்தார்.” எனும் தலைப்பில் ஒரு செய்தி பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர். டபிள்யூ. வீரகோனிடம் வினவியபோது, வாகரை விவசாயிகள் கடந்த காலங்களிலிருந்து பச்சை பட்டாணியை அறுவடை செய்து வருவதாக அவர் கூறினார். அத்துடன் “பருப்பை அறுவடை செய்தார்கள்” என தவறான செய்திகள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வாகரை விவசாயிகளுக்கு “மோரா பருப்பு விதைகள்” வழங்கப்பட்டு, அவற்றை பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.