ஐ. டி. எச் மருத்துவமனையில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அணியும் மருத்துவ ஆடைகளுக்கு பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதோடு, கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம கூறியதாக வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இப்பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, மருத்துவமனையால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்கவிடம் வினவியபோது, ஐ.டி.எச். மருத்துவமனை அத்தகைய அறிவிப்பை ஒருபோதும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனடிப்படையில் புழக்கத்திலுள்ள இந்த செய்தி போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.