புழக்கத்தில் உள்ள செய்தி
திவயின பத்திரிகை
“இலங்கையில் உள்ள 93 பண்டோரா கோடீஸ்வரர்கள்” என்ற தலைப்பில் அக்டோபர் 1, 2021 அன்று, திவயின பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
தலைப்பின் கீழ் உள்ள செய்தி
“புலனாய்வு ஊடக வலையமைப்பு வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களின்படி, 93 இலங்கையர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணம் 48 நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.”
ஒக்டோபர் 7, 2021 அன்று வெளியிடப்பட்ட செய்தி – “மேலும் 93 இலங்கையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் நிசங்க சேனாதிபதியும் உள்ளார்.”
HeadlineNews.lk – வலைத்தள செய்தி
முகநூல் குறிப்பு
“பண்டோரா ஆவணங்களில் 35 பெயர்கள் உள்ளன. ‘நிருபமா ராஜபக்ச (அவரது கணவரின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்), அர்ஜுன் அலோசியஸ், ரவி கருணாநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, சஜின் வாஸ் குணவர்த்தன, படு வெத்தசிங்க, சிறிசேன குரே, டட்லி சிறிசேன, ரொஹான் பல்லேவத்த, சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்ஷித (மாகந்துரே மதுஷ்), கம்பள விதானலாகே சமன் குமார வெலே சுதா), பிமல் ரத்நாயக்க, கிரிஷ்மல் வர்ணசூரியா (வழக்கறிஞர்), அனோமா கமகே (தயா குழும வணிகம்), ரவூப் ஹக்கீம், ஏஎச்எம் ஃபௌஸி, விஜயகலா மகேஸ்வரன், அலி ஸாஹீர் மௌலானா, எஸ்.பி. நாவின்ன, கருணாரத்ன பரணவிதான, வேலுசாமி ராதாகிருஷ்ணன், சமதரா ரணதுங்க, ஹேமா பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, சுஜாதா சேனாரத்ன, கவன் பெரேரா, ரொஹான் பெரேரா, மாவை சேனாதிராஜா, எஸ்.யோகேஸ்வரன், அஜிதர தேவசுந்தர, ஆர். ராஜமகேந்திரன் மற்றும் ஜெய ஸ்ரீ ரங்கா.’
அரசியலை விட கசப்பான எதுவும் இல்லை. நியாயமான வருமானம் ஈட்டுபவர்கள் என்று அழைக்கப்படும் ஜே.வி.பிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இப்போது பண்டோரா ஆவணங்கள் போலியானவையாகின்றன.”
“பண்டோரா மீண்டும் உலகை உலுக்கி வருகிறது. 93 இலங்கையர்களின் பட்டியல் இதோ ” என்ற இந்த செய்தி ஒரு பட்டியலுடன் பதிவேற்றப்பட்டது.
lankalives.com – இணையச் செய்தி
ஐ.சி.ஐ.ஜே
இந்த செய்தி தொடர்பான எமது ஆய்வின் போது, I.C.I.J அமைப்பு இதற்கு முன்னரான ஆய்வு வெளிப்பாடுகள் தொடர்பாக தனித்தனியாக தங்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் நாடுகளின் தரவுகளை வெளியிட்டதை நாம் கண்டறிந்தோம். இதில் 93 இலங்கையர்களின் பெயர்கள் உள்ளன. அதில் 22 பெயர்கள் பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்டது, ஆஃப்ஷோர் லீக்ஸால்(Offshore Leaks) 43 பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டன. பரடைஸ் பேப்பர்ஸினால் 18 பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டன. அத்தோடு மால்டா கார்ப்பரேட் பதிவு மூலம் பாரடைஸ் பேப்பர்ஸ் 10 பெயர்களை வெளிப்படுத்தியது.
பண்டோரா ஆவணங்கள்
சமீபத்திய பண்டோரா ஆவணங்களில் இதுவரை வெளிவந்த இலங்கையரின் பெயர் இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர், தொழிலதிபரான திருக்குமார் நடேசன் ஆகியோர் மட்டுமே.
பிமல் ரத்நாயக்கவின் குறிப்பு
சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவில் ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.
முடிவு
எனவே, சமீபத்திய பண்டோரா பேப்பர்ஸில், 93 இலங்கையர்களின் பெயர் பட்டியலுடன் ஆவணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி தவறானது.