“கென்யர்கள் தங்கள் நாட்டின் பாராளுமன்றத்திற்கு தீ வைத்தனர்” என்ற தலைப்புடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் குறித்த எமது தொழில்நுட்ப விசாரணையில் அந்த புகைப்படம் புர்கினா பாசோ பாராளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்ட போது “The Telegraph” வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.
புர்கினா பாசோ மக்களிடையே மோதலுக்கான உடனடி காரணம், ஜனாதிபதி பிளேஸ் காம்போர்ட் தனது 27 ஆண்டு பதவிக் காலத்தை மேலும் நீடிக்க அனுமதிக்கும் வகையில் மேற்கொண்ட ஒரு அரசியலமைப்பு மாற்றமாகும்.
இந்த சம்பவம் 30 ஒக்டோபர் 2014 அன்று நடந்தது. போராட்டத்தின் முக்கிய கருப்பொருள் “எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. அவர் செல்ல வேண்டும்!” என்பதாகும்.
எனவே, மேற்கண்ட புகைப்படம் கென்யாவில் பாராளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்ட புகைப்படம் அல்ல, மாறாக புர்கினா பாசோவில் நடந்த மோதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படமேயாகும்.