“இனி பாடசாலைகளை மூடுவதற்கு எந்த காரணமும் இல்லை…! பாடசாலைகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும்…!” என்ற தலைப்பில் ஒரு செய்தி சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த செய்தி, சிரேஷ்ட பேராசிரியரும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவத் துறையின் தற்போதைய தலைவரும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மனித நோயெதிர்ப்பு பிரிவின் வருகைதரு கல்வியாளருமான நீலிகா மாளவிகே வெளியிட்ட அறிக்கையாக பரவி வருகிறது. அவருடைய தற்போதைய கவனம் கொவிட் -19 தொடர்பான பாதுகாப்பு மற்றும் வைரஸ் திரிபுகளுக்கான நோயெதிர்ப்பு குறித்ததாகும்.
இச்செய்தி குறித்த மேலதிக அவதானிப்பில் பேராசிரியர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டதாக தெரியவந்தது.
- பாடசாலைகள் விரைவில் திறக்கப்பட வேண்டும்.
- பாடசாலைகளை மேலும் மூடுவது இனி நடைமுறைக்கு சாத்தியமில்லை.
- கோவிட்டால் கணிசமான எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டோர் பதிவாகும் பல மேற்கத்திய நாடுகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
- இலங்கை உட்பட 15 நாடுகள் மட்டுமே 2021 கடந்த மே மாதம் வரை பாடசாலைகளை மூட முடிவு செய்துள்ளன.
தொடர்புடைய செய்தி
இந்த செய்தியின் அசல் பதிவானது பேராசிரியர் நீலிகா மாளவிகே அவர்கள் இலங்கையின் கேட்வே கல்லூரி மாணவர்களுக்காக ஆற்றிய உரையிலிருந்து பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த உரை கேட்வே கல்லூரியின் யூடியூப் அலைவரிசையில் செப்டம்பர் 04, 2021 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது.
பேராசிரியரின் கருத்துக்கு எதிரான மேற்கண்ட செய்திகளை உண்மையைச் சரிபார்க்கும் போது, அவர் சொல்வது என்ன என்பதை பின்வருமாறு விளக்கலாம் :
- கோவிட் -19 காரணமாக அமெரிக்கா மற்றும் வேறு சில மேற்கத்திய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பாடசாலைகளைத் திறந்திருக்கிறார்கள், ஆனால் இலங்கை அவ்வாறு செய்யவில்லை.
- இத்தகைய பின்னணியில் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப இலங்கை பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்.
- அத்தோடு, சில காரணங்களால் பாடசாலை கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் தனது உரையின் போது காட்சிப்படுத்திய உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை அவதானிக்கும் போது தெரியவந்தது.
- மேலும் இலங்கையானது பெருமளவில் பெற்றோர்களைப் பற்றி கவலைப்படுவதாகவும் குழந்தைகளைப் பற்றி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மேற்கண்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை அவர் நேரடியாக வெளியிடவில்லை.
இருப்பினும், “பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு காத்திருக்க முடியாது” என யுனிசெஃப்பின் நிர்வாக பணிப்பாளர் ஹென்றிட்டா ஃபோர் மற்றும் யுனிசெஃப்பின் பணிப்பாளர் நாயகம் ஆட்ரி அசோலே, ஆகியோரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அவர் எடுத்துரைத்தார்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றவாறு பரவும் செய்திகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது எனவும், யுனிசெஃப் பணிப்பாளர்களின் அறிக்கைகளைக் குறிப்பிடும் அவரது உரை தவறாக மேற்கோள் காட்டப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் அவரது பேஸ்புக் கணக்கில் ஒரு தனிப்பட்ட குறிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
எனவே, பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து பேராசிரியர் நீலிகா மாலவிகே வெளியிட்ட அறிக்கை என பரவும் செய்தி உண்மையில் யுனிசெஃப் நிர்வாக பணிப்பாளர் ஹென்றிட்டா ஃபோர் மற்றும் யுனிசெப் பணிப்பாளர் நாயகம் ஆட்ரி அசோலே ஆகியோர் அளித்த அறிக்கை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.