“அனைத்து வகையான இணையவழி பணக் கொடுப்பனவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு கடிதம் பரவி வருகிறது.
“இலங்கை எதிர்கொள்ளும் டொலர் பற்றாக்குறை காரணமாக, வரவு அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் அனைத்து வகையான இணையவழி பணக் கொடுப்பனவு வசதிகளையும் தடை செய்ய இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இது உள்நாட்டில் நடத்தப்படும் வெளிநாட்டுத் தேர்வுகள், பட்டப்படிப்புகள் போன்றவற்றுக்கு பணம் செலுத்தும் வாய்ப்பையும் பாதிக்கும்.” எனவும் கடிதத்தின் உள்ளடக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து அறிய நாம் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வில், இலங்கை மத்திய வங்கி கடன் அட்டைகள் மற்றும் வரவு அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்த புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றும், மேலும் அட்டைதாரர்கள் தங்கள் சொந்த அட்டைகளைப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் உறுதியானது. அத்தோடு இலங்கைக்கு வெளியே வசிப்பவர்கள் தனியார் கையடக்க தொலைபேசியூடான பரிவர்த்தனைகளிலும் பணம் செலுத்தலாம்.
“சில வங்கிகள், வங்கி அட்டைகளின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், அந்தந்த வங்கிகளின் நிலவும் அந்நிய செலாவணி நிலைக்கு ஏற்ப பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், இலத்திரனில் பணப்பரிமாற்ற அட்டைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.” என பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான இணையவழி பணக் கொடுப்பனவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என வெளியான வதந்திகள் பொய்யானவை என்று இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
கையடக்க தொலைபேசி பரிவர்த்தனைகள் 18.03.2021 திகதியிடப்பட்ட இலக்கம் 02 இன்படி செல்லுபடியாகும் அதேவேளை, இலத்திரனியல் பணப்பரிமாற்ற அட்டைகள் 18.03.2021 திகதியிடப்பட்ட இலக்கம் 03 இன்படி செல்லுபடியாகும்.
18.03.2021 திகதியிடப்பட்ட 2021இன் இலக்கம் 02 அடிப்படையில் கையடக்க தொலைபேசி பரிவர்த்தனைக்கான நிபந்தனைகள் – https://bit.ly/3zcJOkr
மேலும், கடன் அட்டைகளை தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் வணிக நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும் வரவு அட்டைகளை எந்த இடையூறும் இல்லாமல் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே, அனைத்து வகையான இணையவழி பணக் கொடுப்பனவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என பரவும் செய்திகள் தவறானவை.