இலங்கையில் உள்ள முன்னணி செய்தி வலைத்தளங்களில் ஒன்றான ‘நியூஸ்வைர்’ என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு செய்தி வாட்ஸ்அப் வழியாக வைரலானது. அந்த செய்தி பின்வருமாறு:
“18 வயது முதல் 30 வயது வரையானோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – நியூஸ்வைரின் விபரங்கள் – https://bit.ly/3fKBIb3 ,கிங்ஸ்பரி ஹோட்டலின் பின்புறம் காலி முகத்திடலின் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசி வழங்கப்படும். நாளை காலை 7.30 மணி முதல்,18 முதல் 30 வயது வரையானோருக்கு வழங்கப்படும்.”
மேற்கண்ட செய்தி குறித்த தொழில்நுட்ப விசாரணையில், ‘நியூஸ்வைர்’ செய்தித்தளம் தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிடவில்லை என்றும், வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி போலியானது என்றும் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் (https://cutt.ly/BQC7sDj), அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் (https://cutt.ly/CQC7XFZ), அதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும் (https://cutt.ly/pQC7nVR) ஆகஸ்ட்16, 2021 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இச்செய்திகளை ஆராய்ந்ததில், இலங்கை அரசு 30 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானித்திருப்பது தெரியவந்தது. இது குறிப்பாக 29 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. (https://cutt.ly/ZQBVqfF, https://cutt.ly/3QBVrqh) எனினும் குறித்த வயதினருக்கு இதுவரை தடுப்பூசி வழங்கும் திட்டத் ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே, மேற்கண்ட வாட்ஸ்அப் செய்தி ‘நியூஸ்வைர்’ செய்தி வலைத்தளத்தால் வெளியிடப்பட்ட செய்தியாகப் போலியாக பரப்பப்படுகிறது. மேலும் இது கோவிட் -19 தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றமை தெளிவாகிறது.