“ஜிப்சிஸ் குழுவின் நிறுவனர், பாடகர் சுனில் பெரேரா கோவிட் -19 தொற்று காரணமாக காலமானார்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனை உறுதிப்படுத்த பாடகர் சுனில் பெரேராவின் மகன் சஜித் பெரேராவை தொடர்பு கொண்டபோது, அவர் தனது தந்தைக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் கூறினார்.
மேலும், புழக்கத்தில் உள்ள செய்தி போலியானது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
பிரபல இசையமைப்பாளர் சுனில் பெரேரா கோவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அவரது மரணம் குறித்த செய்தி தவறானதாகும்.