“நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக புதன்கிழமை முதல் நாடு முழுமையாக முடக்கப்படுமா? -இராணுவத் தளபதியின் அறிவிப்பு” எனும் தலைப்பில் ஒரு தவறான செய்தி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
இச்செய்தியின் தலைப்பு “நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக புதன்கிழமை முதல் நாடு முழு முடக்கப்படுமா? -இராணுவத் தளபதியின் அறிவிப்பு” என இருந்தாலும் செய்திக்கான இணைப்பானது புதன்கிழமை முதல் ஒரு தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பமாகும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்திருப்பதாக மட்டுமே குறிப்பிடுகிறது.
என்.சி.டி.வி எனும் யூடியூப் அலைவரிசையானது தவறாக வழிநடத்தும் தலைப்புகளுடன் பல செய்திகளை வழங்குகிறது, மேலும் இந்த தவறான செய்திகள் பலவற்றை Factseeker ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
இருப்பினும், இந்த செய்தியை உறுதிப்படுத்த இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுடன் தொடர்பு கொண்டபோது, இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
புதன்கிழமை முதல் ஊரடங்கு விதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இராணுவ ஊடக பிரிவு உறுதிப்படுத்தியது.